search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொழிலாளர்கள் ஓட்டம்"

    காட்டு யானைகள் குட்டிகளுடன் புகுந்ததால் பச்சை தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள், யானைகளை பார்த்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

    ஊட்டி;

    நீலகிரி பந்தலூர், பந்தலூர் அருகே கொளப்பள்ளி அரசு தேயிலை தோட்டம் ரேஞ்ச் எண்.2 பாலவாடி குடியிருப்பு பகுதிகளில் தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு காட்டு யானைகள் குடியிருப்புகளை முற்றுகையிட்டது. இதனால் தொழிலாளர்கள் அச்சம் அடைந்தனர். நேற்று அதே பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் காட்டு யானைகள் குட்டிகளுடன் புகுந்தது.

    இதனால் பச்சை தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள், யானைகளை பார்த்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். அப்போது ஒரு யானை மழவன் சேரம்பாடியில் இருந்து புஞ்சைகொல்லி செல்லும் சாலையில் சென்றது. இதனால் தொழிலாளர்கள், பொதுமக்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். தகவல் அறிந்த சேரம்பாடி உதவி வனபாதுகாவலர் ஷர்மிலி மற்றும் வனத்துறையினர் காட்டு யானைகள் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

    ×